மதுரை- ராணுவ விமானம் மூலம் ராஞ்சிக்கு காலி ஆக்சிஜன் லாரிகள் கொண்டுசெல்லப்பட்டது.

மதுரை விமான நிலையத்திலிருந்து காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் ராஞ்சிக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது

Update: 2021-05-29 07:32 GMT

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம்...

மதுரை விமான நிலையத்திலிருந்து மேலும் 3 காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை ராஞ்சிக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது:

மதுரை விமான நிலையத்திற்கு 24 ஆயிரம் கிலோ கொள்ளளவு கொண்ட 3 காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.அங்கு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யக் கூடிய ஆக்சிஜனை நிரப்பிய பின் மீண்டும் ரயில் மார்க்கமாக டேங்கர் லாரிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏற்கனவே  9 டேங்கர் லாரிகள் தற்போது 3 லாரிகள் என இது வரை மொத்தம் மொத்தம் 12 லாரிகள் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News