ஆயுதபூஜைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

Update: 2021-10-07 08:52 GMT

அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவரும் 12, 13ம் தேதிகளில் போக்குவரத்துத்துறை கூடுதல் பேருந்துகளை இயக்கவுள்ளது.

அதன்படி, வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். அதன்படி, பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து

* திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்.

* போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

* திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள்.

* திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து

* வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து

புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் (வழி ஈ.சி.ஆர்), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர்.

மேற்கூறிய 3 இடங்களில் இருந்து வரும் 12, 13ம் தேதிகளில் மக்கள் பேருந்துகளில் பயணிக்கலாம். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News