பாரத சாரணர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு

பாரத சாரணர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2022-09-12 06:46 GMT

தமிழ்நாடு பாரத சாரணர் இயக்கத்தின் தலைரவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

பாரத சாரணர் மற்றும் சாரணீயர் இயக்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவராக தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் அதற்கான சீருடை அணிந்து சென்னை முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

Tags:    

Similar News