திருமங்கலம் தேவர் திடல் முன் அ.தி.மு.க. வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர் திடல் முன்பு அ.தி.மு.க. வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.;
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து திருமங்கலத்தில் இனிப்பு வழங்கினர்.
அ.தி.மு.க. பொதுக்குழு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. மேலும் இடைக்கால அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்துதிருமங்கலம் வழக்கறிஞர் பிரிவு முத்துராஜா , வெங்கடேஷ்வரன், காளி, நிர்வாகிகள் ஓம்பிரகாஷ், கரிகாலன் ஆகியோர் திருமங்கலம் தேவர் திடல் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.