உரப்பனூர் ஊராட்சியில் சொட்டுமருந்து முகாம்

திருமங்கலம் அருகே உரப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.

Update: 2022-02-27 05:13 GMT

சொட்டு மருந்து முகாமை துவக்கிவைத்த ஊராட்சி மன்றத் தலைவர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா உரப்பனூர் ஊராட்சியில் சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் யசோதை சாமிநாதன் துவக்கிவைத்து, குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கினார்.

இப்பகுதி மக்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சொட்டு மருந்தினை பெற்றுச் சென்றனர்.

Tags:    

Similar News