திருமங்கலத்தில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் இராஜாஜி சிலை முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

Update: 2022-06-20 14:07 GMT

திருமங்கலம் இராஜாஜி சிலை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் இராஜாஜி சிலை முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் இராஜாஜி சிலை முன்பு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தெலுங்கானா மாநில பொறுப்பாளர் மாணிக் தாகூர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகரம் மற்றும் வட்டாரம் சார்பாக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சம்பந்தமான அமலாக்கத்துறையை ஏவிவிட்டு தண்டிக்க துடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி எம். பாண்டி தலைமை வகித்து நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர் எம். ஜெயராம் மற்றும் மாநில பொது செயலாளர் எஸ். இளங்கோவன் திருமங்கலம் நகர தலைவர் கரிசல்பட்டி எஸ். சவுந்தரபாண்டி வட்டாரத் தலைவர்கள் முருகேசன், சங்கன், தளபதி சேகர், பாண்டியன் வீரபுத்திரன், உசிலம்பட்டி நகர தலைவர் மகேந்திரன், நகர துணைத்தலைவர் சரவணன், நகர செயலாளர் ராஜா தேசிங், கவுன்சிலர் அமுதா சரவணன், முன்னாள் நகர தலைவர் தாமு, மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் நகர வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News