மதுரையில் நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ 32 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்த பிரபல தனியார் நிறுவனம் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ததாக புகார்;

Update: 2021-11-08 17:15 GMT

மதுரை தல்லாகுளம் பகுதியில் இடத்தை விற்பனை செய்து தருவதாக கூறி ரூ 32 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒருவர் மீது வழக்குப் பதிவு.

மதுரை மாவட்டம் திருநகர். பகுதியை    சேர்ந்த ஸ்ரீகாந்த் இவருக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்து தருவதாக, மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்த பிரபல தனியார் நிறுவனம் பெயரை பயன்படுத்தி, சமயநல்லூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் சுமார் முப்பத்தி இரண்டு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக ஸ்ரீகாந்த், மதுரை மாநகர் குற்றப்புலனாய்வு காவல்துறையில் அளித்த புகாரை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News