திருமங்கலம் பகுதிக்கு மட்டும் 140 டன் யூரியா: வேளாண் இணை இயக்குனர் தகவல்

திருமங்கலம் பகுதிக்கு மட்டும் 140 டன் யூரியா அனுப்பப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் தெரிவித்தார்.;

Update: 2021-11-08 17:30 GMT

பைல் படம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் யூரியா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வேளாண் துறை இணை இயக்குநர் தகவல் கிடைத்துள்ளது இந்நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில்கொண திருமங்கலம் பகுதிக்கு அடுத்தடுத்து 140 டன் யூரியா அனுப்பப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது மதுரை மாவட்டத்தின் மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் விற்பனைக்கு என கூட்டுறவு கடன் சங்கம் தனியார் கடைகளில்  1417 கையிருப்பில் உள்ளது டிஏபி 431 மெட்ரிக் டன் பொட்டாஸ் 1,026 காம்ப்ளக்ஸ் 4051 சூப்பர் பாஸ்பேட் 345 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளதால் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் அடுத்தடுத்து மாவட்டத்திற்கான கையிருப்பு பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது திருமங்கலம் பகுதிக்கு மட்டும் 140 டன் யூரியா அனுப்பியுள்ளோம் என்றார்.

Tags:    

Similar News