ராஜாக்கூர் பகுதியில் காலியாக உள்ள வீடுகளை மறு ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்

மதுரை ராஜாக்கூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட சுமார் 1500 வீடுகளில் மறு ஒதுக்கீடு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-22 01:45 GMT

மதுரை மாவட்டம் ராஜாக்கூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 1566 வீடுகளில் 70% வீடுகள் காலியாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில் வீடு ஒதுக்கீடு பெற்ற பலர் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர்.


இந்நிலையில் ராஜாக்கூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மராமத்து பணி செய்யப்பட்டது .

தற்போது காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வீடு இல்லாதவர்களுக்கு மறு ஒதுக்கீடு செய்யும் பணி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பத்தை அளித்து வருகின்றனர்.

மேலும் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அவர்கள் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News