அலங்காநல்லூர் அருகே புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா: எம்எல்ஏ பங்கேற்பு
அலங்காநல்லூர் அருகே புதிய அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ., வெங்கடேசன் திறந்து வைத்தார்.;
அலங்காநல்லூர் அருகே புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ., வெங்கடேசன்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தேவசேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மற்றும் புதிய குடிநீர் இணைப்பு திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணிசசி, அவை தலைவர் பாலசுப்ரமணியன், செயற்குழு உறுப்பினர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய சேர்மன் பஞ்சு அழகு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், துணை தலைவர் கண்ணன், கூட்டுறவு தலைவர் முத்தையன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ஊராட்சி செயலர் அழகுமீனா மற்றும் நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.