மதுரை அருகே செல்போனில் விளையாடியதால் பெற்றோர் கண்டிப்பு: சிறுவன் தற்கொலை

மதுரையில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-09-27 08:06 GMT

பைல் படம்.

மதுரையில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை தந்தை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த முத்துமாரி என்பவரின் மகன் பிரான்சிஸ் எபினேசர். இவர் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதனால் அவரது பெற்றோர் சிறுவனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மனமுடைந்த 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News