மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில உலக இருதய தினம் அனுசரிப்பு
இந்தியாவில் நிகழும் அனைத்து இழப்புகளும் 30 சதவீத ஊயிரிழப்பிற்கு முதன்மைக் காரணமாக இருதய நோய் இருக்கிறது. இருதய நோயாளிகள் சுமார் 40% நபர்கள் 45 ஆண்டுகளுக்கும் குறைவான வயது சேர்ந்தவர்கள்;
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உலக இருதய நாள் நிகழ்வில் பங்கேற்ற அத்துறை மருத்துவர்கள்
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உலக இருதய தினம் அனுசரிக்கப்பட்டது
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு, சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இதயவியல் துறையின் தலைவர் டாக்டர் என். கணேசன் பேசியது: ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் 3-5 மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுகின்றன. இந்தியாவில் நிகழும் அனைத்து இழப்புகளும் 30 சதவீத ஊயிரிழப்பிற்கு முதன்மைக் காரணமாக இருதய நோய் இருக்கிறது. இருதய நோயாளிகள் சுமார் 40% நபர்கள் 45 ஆண்டுகளுக்கும் குறைவான வயது சேர்ந்தவர்கள் என்பது வேதனைக்குரியது. இந்த வயதுக்குரியவர்கள் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியது மிகவும் அவசியம் . திறம்பட செயலாற்ற கூடிய வயதாத 30 மற்றும் 40 வயது இருக்கும்போது, இருதய நோய்கள் ஏற்படுவதன் காரணமாக அந்த நபர்களது குடும்பம் கடுமையான நிதிசார் சுமைகளை எதிர்கொள்ள வைக்கும். இருதயநோய் பிரச்னைகளுக்கான இடர்களை , வராமல் முன் தடுப்பதே சிறந்த தீர்வாகும். இளம் தலைமுறையினர் தாமதமின்றி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இருதய நோய் வருவதை முன்னதாகவே உரிய சோதனைகள் மூலம் அவர்கள் கண்டறிவது அவசியம் .அத்துடன் வாழ்க்கை முறை மாற்றங்களை எதிர்கொண்டு அதை சமாளிப்பதற்கான செயல் திட்டங்களையும் உருவாக்கி ஆரோக்கியமாக உடல் நலத்தை பேண வேண்டும். இருதய பிரச்னைக்கு பல காரணங்கள் இருக்கின்றன.
உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரழிவு ,காற்று மாசு, உடல் பருமன், புகையிலை பயன்பாடு, சிறுநீரக நோய், உடற்பயிற்சியின்மை மற்றும் மது அருந்துதல் ஆகியவை காரணிகளில் உள்ளடங்கும். கூடுதலாக, குடும்ப பரம்பரை, பின்புலம், பாலினம் மற்றும் வயது ஆகிய காரணங்களும் இந்த நோய் வரும் வாய்ப்பு இருக்கிறது . மன அழுத்தம், துரித உணவு ,போதிய உறக்கமின்மை, பரபரப்பான அதிவேக வாழ்க்கை போன்ற காரணங்களும் அடங்கும் என்றார் டாக்டர் கணேசன்.
இந் நிகழ்ச்சியில், இருதயம், நுரையீரல் இரத்த நாள அறுவைச் சிகிச்சைத் துறையின் தலைவரும் முதுநிலை மருத்துவருமான ஆர்.எம். கிருஷ்ணன், இருதய நுரையீரல் இரத்த நாள அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜன் மற்றும் இருதயம் சார்ந்த உணர்வு துறையில் முதுநிலை டாக்டர் ஜெயபாண்டியன், டாக்டர் சம்பத்குமார், டாக்டர் செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.