மதுரை அருகே 5 மாதத்துக்கு முன் அமைத்த சாலையை காணோம்: புலம்பும் கிராம மக்கள்

மதுரை அருகே 5 மாதத்துக்கு முன் அமைத்த சாலையை காணோம் என கிராம மக்கள் புலம்பி வருகிறார்கள்.

Update: 2024-07-11 09:04 GMT

மதுரை  அருகே 5  மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட சாலையை காணவில்லை என கிராம மக்கள் புலம்பி வருகிறார்கள்.

மதுரை அருகே காணாமல் போன சாலையை 5 மாதமாக வீட்டுவாசலில் நின்றபடி தேடும் குடியிருப்புவாசிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட , பொதும்பு கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், நகரத்தை ஒட்டிய ஊராட்சிகளில் உட்கட்டமைப்பு மேம் படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைகளுக்கான, பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை ப்பணிகள் முடிவடைந் துள்ளன. அதற்கான அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அதே பொதும்பு ஊராட்சியில், உள்ள அகல்யா வீதி என்ற பகுதியில் 13.5லட்சம் மதிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சாலைகள் அமைப்பதற்கான ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. அதோடு அவ்வளவுதான். தற்போது வரை 5 மாதம் கடந்த நிலையிலும் தார் ஊற்றி சாலையை அமைக்காமல் அப்படியே விட்டு சென்றுள்ளனர்.

ஆனால்  அந்த சாலை அமைக்கப்பட்டதற்கான பணிகள் தொடங்கியதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, அதில் மதிப்பீடு அதிகாரிகள் பெயர் தொடர்பு எண்ணுடன் அச்சிடப் பட்டுள்ளது. ஆனால், போர்டெல்லாம் பளபளவென இருக்க சாலையோ கொட்டியஜல்லி கற் களெல்லாம், நொறுங்கி மணலாய் மாறிவிட்டது.

கற்கள் கொட்டி 5 மாதம் ஆன நிலையில், இந்த சாலையில் கார், பைக், ஆட்டோக்கள், பால் வண்டி உள்ளிட்ட எந்த வாகனம் வந்தாலும், பஞ்சர் ஆகிவிடும் என்ற நிலை உள்ளதால், அங்குள்ள குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், ஜல்லிக்கற்களில், நடந்து செல்லும் போது முதியவர்களும், குழந்தைகளும் கீழே சறுக்கிவிழும் விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகிறது.

13.5 லட்சம் மதிப்பில் போடப்பட்ட இந்த சாலையில், ரோடு ரோலர்களும், ஜேசிபிகளும் மட்டும் செல்லும் நிலை உள்ளது. இதனால், அதிகாரிகள் போட்டதாக சொல்லப்படும் சாலையை காணாமல் போன நிலையில் எப்போது எங்களது சாலையை கண்டு பிடிப்போம் என, 5 மாதமாக அவ்வப்போது சாலைக்கு வந்து எட்டி எட்டி பார்த்து ஏமாற்றத்துடன் நிற்கின்றனர் குடியிருப்புவாசிகள்.

பிப்ரவரி மாதம் போட்ட ரோட்ட காணாமேனு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டால், நாளை நாளை என, காரணம் கூறியே 5 மாதம் கடத்திவிட்டனர். எனவும், இதன் உச்சக்கட்டமாக பெய்யாத மழையை காரணம் காட்டி சாலை போட முடியவில்லை என அதி காரிகளுக்குள்ளேயே காரணம் சொல்ல முடியாமல், குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பொதும்பு ஊராட்சியில், பிப்ரவரி மாதத்தில் அதே தேதியில் தொடங்கிய சாலைப் பணிகள் எல்லாம் முடிவடைந்த நிலையில், அகல்யா வீதிக்கு மட்டும் மழை எப்படி பெய்கிறது என, அதிகாரிகளின் விளக்கமே அப்பகுதி மக்களைவியக்க வைத்து விடுகிறது.

என்ன ஆனாலும், எந்த பதிலும் சொல்ல முடியாது என்பது போல மக்களின் வரிப்பணமான 13லட்சம் பணம் வீணாகிபோனது குறித்து விளக்கம் கேட்க முயன்றாலும், சில அதிகாரிகள் கும்பகர்ண தூக்கத்தில் இருப்பது போன்று, கண்டும் காணாமல் இருந்துவருகின்றனர்.

ரோடு போட்டு மாதம் ஆன நிலையில் அதில் ரோடு ரோலரும், ஜெசிபி மட்டுமே செல்ல பயன்படும் அளவிற்கு இருப்பதால்,இது குறித்து, மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் பிப்ரவரி மாதம் ஜல்லி கொட்டுனாங்க 5 , 6 மாசம் ஆச்சு ரோட்டையே காணோம் போன்ல கேட்டா 2 நாளில் போட்ருவோம்னு சொல்லி சொல்லி ஏமாத்துறாங்க, நடந்துகூட போக முடியல ரோடு ரோலரும், JCB மட்டும் தான் போக முடியும், போட்ட ஜல்லி எல்லாம் மண்ணா மாறிடுச்சு , ஜல்லி கொட்டாம இருந்தப்ப கூட ரோடு நல்லா இருந்துச்சு ஆனால் இப்போ அதுவும் இல்லாம நடக்க கூட முடியல தயவுசெஞ்சு காணாம போன, ரோட்ட கண்டுபுடிங்க. புது ரோடு போடும்போது மீண்டும் ஜல்லிய கொட்டி ரோடு போட வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News