ரயில்வே பணியிடங்களை நிரப்பக் கோரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் ரயில்வே பணியிடங்களை நிரப்பக் கோரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-02-02 11:17 GMT

மதுரை ரயில்வே மேற்கு நுழைவாயில் டி.ஆர்.இ. யூ., சிஐடியு மதுரை ரயில்வே கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை ரயில்வே மேற்கு நுழைவாயில் டி ஆர் இ யூ சிஐடியு மதுரை ரயில்வே கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நீண்ட காலமாக உள்ள ரயில்வே காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ரயில்வே நிலையங்கள் ரயில்வே பணிமனைகளில் தனியாருக்கு தாரைவார்த்து கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டி.ஆர்.இ.யூ. சிஐடியூ நிர்வாகிகள் அன்ட்ரன், சரவணன், கணேசன், தேவராஜ், திருமலை அய்யப்பன், சங்கரநாராயணன், சிவகுமார், கண்ணன், வினோத் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News