சர்க்கரை நோயாளிகள் உரிய காலத்தில் கண் பரிசோதனை: மருத்துவர் அறிவுறுத்தல்
சர்க்கரை நோயால் மனிதனுக்கு தாற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ கண் பாதிக்கப்படலாம்;
மதுரை அகர்வால் கண் மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய கண் மருத்துவர் திவ்யா.
சர்க்கரை நோயால் ஏற்படும் கண் நோய்க்கு உரிய கால அளவுகளில் அவசியம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.
நீரழிவு சார்ந்த கண் நோய்க்கு உரிய கால அளவுகளில், கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என, மதுரையில் அகர்வால் கண் மருத்துவமனையில் புதன்கிழமை நடந்த கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.
கருத்ரங்கில் மதுரை அகர்வால் கண் பரிசோதனை மைய டாக்டர் திவ்யா பேசியதாவது: இந்தியாவில், மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோயால் விழித்திரை பாதிக்கப்படுகிறது. மேலும், சர்க்கரை நோயால் மனிதனுக்கு தாற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ கண் பாதிக்கப்படலாம். ஆகவே, உரிய கால அளவில் சர்க்கரை நோயாளிகள் கண் பரிசோதனை செய்வது அவசியம் .இந்த மருத்துவமனையில், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச மருத்துவ ஆலோசனையை வழங்கி வருகிறோம். வயது குறைவாக உள்ளவர்களுக்கு, அரை கட்டண சலுகையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி, இந்த மருத்துவமனையில், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு, நவம்பர் மாத இறுதி வரை இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்றார் அவர்.