திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு மதுரையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திரு விழாவுக்காக மதுரையிலிருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது

Update: 2023-11-23 09:15 GMT

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2023 பண்டிகை 26.11.2023 அன்று வருவதை முன்னிட்டு, பொது மக்கள் அதிகளவில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்வார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம்  மதுரை கோட்டம் சார்பாக,  மதுரை, திண்டுக்கல், மற்றும் விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் சிறப்பு பேருந்துகளும் திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவிற்கு 25.11.2023 முதல் 27.11.2023 வரை 180 பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இப்போக்குவரத்துக் கழகம் மூலம் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சென்று வர பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும், முன்பதிவில்லா பேருந்துகளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகளின் கடைசி நேர கூட்ட நெரிசலையும்,கால நேர விரயத்தையும் தவிர்க்கும்பொருட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் கைபேசி செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக பேருந்துகளின் முன்பதிவு செய்து பயனடையுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என, மதுரை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News