மதுரையில் நிதியமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மதுரையில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை நிதிஅமைச்சர் தொடங்கி வைத்தார்;
மதுரையில் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மதுரையில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை நிதிஅமைச்சர் தொடங்கி வைத்தார்.
மதுரை மாநகர் 10- வது வார்டு டி. டி. சாலை பகுதியில் மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் (2016 - 2021 )இருந்து 10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை, மதுரை மாநகர் 18- வது வார்டு, எஸ். பி. ஓ. ஏ காலனி பகுதியில், மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து (2020 -2021 )17 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மற்றும் மின் விளக்குடன் கூடிய சிறுவர் பூங்கா ஆகியவற்ரை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார். இதையடுத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில், முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.