மதுரையில் கலைஞர் டிஜிட்டல் நூலகம் கட்டும் பணியை அமைச்சர்கள் ஆய்வு

மதுரையில் கலைஞர் டிஜிட்டல் நூலகம் கட்டும் பணியை அமைச்சர்கள் எவவேலு, மூர்த்தி ஆய்வு செய்தனர்.

Update: 2022-03-25 05:45 GMT

மதுரையில் டிஜிட்டல் நூலகம் கட்டுமான பணியை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

மதுரையில் கலைஞரின் நினைவு நூலகம் கட்டுமான பணியை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ .வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார் . மதுரையில், தமிழக அரசின் உத்தரவின்படி டிஜிட்டல் நூலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இப் பணியினை, இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பொறியாளரிடம் கட்டுமான பணி குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News