மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் ரோஜா தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் ஆசிர்வாதத்துடன் இரண்டு முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று தற்போது அமைச்சராகியுள்ளேன்;

Update: 2023-05-16 00:30 GMT

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆந்திர சுற்றுலாத்துறை ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி தொகுதி எம்எல்ஏவுமான நடிகை ரோஜா  மதுரைக்கு வருகை தந்தார். இதையடுத்து நேற்று காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை புரிந்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மீனாட்சி அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி சென்று வழிபட்டார். பின்னர் பொற்றாமரைக்குளம் உள்ளிட்ட இடங்களில் கலைநுட்பங்களை  பார்வையிட்டார். பின்னர் அம்மன் சநிநிதி வழியாக கோவிலில் இருந்து வெளியே வந்தார்..

அப்போது, செய்தியாளர்களிடம் ஆந்திர மாநில அமைச்சர் நடிகை ரோஜா கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் ஆசீர்வாதத்தோடு 2 முறை எம்எல்ஏவாக ஜெயித்திருக்கிறேன். முதலில் 2013ல் வந்து மீனாட்சி அம்மனிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு போனேன். அமைச்சரான பின்பு முதல் முறையாக வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. சுவாமி, அம்மனுக்கு பூஜை செய்துவிட்டு நகரி தொகுதிக்கு செல்கிறேன். தரிசனத்திற்குப்பின் கிடைத்த புதிய சக்தியோடும், உத்வேகத்தோடும் ஆந்திர மாநில மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மகிழ்ச்சியாாக செல்கிறேன் என தெரிவித்தார்.


Tags:    

Similar News