பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மதுரையில் பா.ஜ.க போராட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி, மதுரையில் பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-30 08:15 GMT

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். 

தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. அவ்வகையில், தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி, மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே மனித சங்கிலி போராட்டத்தில், மதுரை பாஜகவினர் ஈடுபட்டனர்.

மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் தொடங்கி, ரயில்நிலையம், பாண்டி பஜார் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், பாஜக தொண்டர்கள், தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி, பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டவாறு  நின்றனர்.

Tags:    

Similar News