மதுரையில் பெண் பயணியிடம் தங்க நகை திருட்டு: போலீஸார் விசாரணை

Gold jewelery stolen from female passenger in Madurai

Update: 2022-06-25 08:15 GMT

ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் 42 பவுன் தங்க நகை திருட்டு:

 மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், ஓடும் பஸ்ஸில் பெண் பயணியிடம் 42 பவுன் தங்க நகைகள் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி பவர் அவுஸ் தெருவை சேர்ந்தவர் கீதா( 50.)  இவர், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் சென்ற டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார்.பஸ் நிலையத்தில் பஸ் நுழைந்தபோது, தான் வைத்திருந்த பேக்கை சோதித்தார் .அப்போது ,அதில் வைத்திருந்த 42,  பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த  கீதா அளித்த புகாரின் பேரில் , கரிமேடு. போலீசார் வழக்குப்பதிவு செய்து ,ஓடும் பஸ்ஸில் திருட்டு பயணியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News