அவனியாபுரம் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: மாநகராட்சி கவனிக்குமா?

மதுரை மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில், அவனியாபுரம் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் சூழ்ந்துள்ளது.

Update: 2021-12-06 01:00 GMT

அவனியாபுரம் பெரியசாமி நகர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை வெள்ளம்.

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதியில் பெய்த மழையால்,  பெரியசாமி நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில், சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் .மழையால், அவனியாபுரம் புது குளம் கண்மாய் நிரம்பியது. கண்மாய் நீர் பெரியசாமி நகர் பகுதியில் வெள்ளமாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

இதனால், இப்பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், மழைநீர் சூழ்ந்ததால் வெளியில் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். இனியாவது, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வலுத்துள்ளது.  

Tags:    

Similar News