மதுரையில், அமைச்சர் தொகுதியில் நீரில் மிதக்கும் வீடுகள்: பொதுமக்கள் வேதனை

மதுரையில் அமைச்சர் தொகுதியில் நீரில் மிதக்கும் குடியிருப்புகள்,பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

Update: 2021-11-26 23:30 GMT

மதுரை கூடல் நகர் பகுதியில் குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் மழை நீர்

மதுரையில் அமைச்சர் தொகுதியில் நீரில் மிதக்கும் குடியிருப்புகள்,பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பகுதிவாசிகள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தில், நேற்றைய தினம் தொடர்ச்சியாக 3மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.இதனால், மதுரை செல்லூர் கண்மாய்க்கு செல்லக்கூடிய நீர்வரத்து கால்வாய்களில் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் வாய்க்கால்கள் நிரம்பி நீர் வெளியேறுவதால், மதுரை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளான கூடல்புதூர், கூடல்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழந்துள்ளதால், பொதுமக்கள் வீட்டிற்குள்ளயே முடங்கியுள்ளனர். இதன் காரணமாக, அத்தியாவாசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் பெண்கள், முதியோர்கள் நனைந்தபடி பணிக்கு செல்ல கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பாம்பு போன்ற விஷ ஜந்துகள் வெளியேறுவதால், பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.அமைச்சர் பி.மூர்த்தியின் தொகுதியான இந்த பகுதியில், பல நாட்களாக நீடித்துவரும் பிரச்னை குறித்து புகார் அளிக்கப்பட்டும் முறையாக தூர்வாருவதற்கு, எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லையென என, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ந்து, நீர் வரத்து அதிகமாக இருப்பதால், குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News