மதுரை அருகே கொரோனா விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி: கிராம மக்கள் ஆர்வம்

மதுரை மேற்கு ஒன்றியம்,சின்னப்பட்டி ஊராட்சி மன்றத்தில் கொரேனா தடுப்பு விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2021-11-26 04:44 GMT

மதுரை அருகே கொரோனா விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சியை ஆர்வத்துடன் கிராம மக்கள் பார்த்தனர். 

மதுரை மாவட்டம், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் கொரேனா தடுப்பு விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சியானது, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், மதுரை மேற்கு ஒன்றியம்,சின்னப்பட்டி ஊராட்சி மன்றத்தில் நடைபெற்றது.

இக்கண்காட்சியை, காண ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து மகிழ்ந்தனர். கண்காட்சியில், மதுரை மேற்கு ஒன்றியக் குழு துணைத் தலைவர் கார்த்திக் ராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் சக்தி மயில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வா. விநோத், செய்தி மக்கள் தொடர்புத் துறையைச் சேர்ந்த ராஜ்குமார், சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த புகைப்படக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, மதுரை செய்தி மக்கள் தொடர்புத் துறையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News