மதுரை: குளிக்க சென்ற சிறுவன் கோயில் குளத்தில் மூழ்கி பலி
மதுரை அருகே, கோயிலில் குளிக்கச் சென்ற சிறுவன் மூழ்கி பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;
மதுரை மாவட்டம், ஆணையூர், இமயம் நகரை சேர்ந்தவர் திருப்பதி மகன் அர்ஜூன் 14. இவர் ஆலங்குளம் முனியாண்டி கோவில் அருகே உள்ள கோயில் குளத்துக்கு குளிக்கச் சென்றான். அப்போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இந்த சம்பவம் குறித்து, கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.