மதுரையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ஏடிஎம் -மில் கொள்ளை முயற்சி

ஏடிஎம் வாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்துவிட்டு ஏடிஎம் மிஷின் கதவை உடைக்க முயற்சித்தபோது மணி ஒலித்தது

Update: 2022-01-02 05:15 GMT

மதுரை காமராஜர் சாலை குருவிக்காரன் சந்திப்பில் உள்ள  எஸ்பிஐ வங்கி ஏடிஎம் 

மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை காமராஜர் சாலை குருவிக்காரன் சந்திப்பில் அருகில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஏடிஎம் வந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர், ஏடிஎம் வாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்துவிட்டு, ஏடிஎம் உள்ளே சென்று ஏடிஎம் மிஷின் கதவை உடைத்து திறக்க முயற்சி மேற்கொண்டிருந்தாராம்.

இந்த முயற்சியில், அவர் ஈடுபட்ட போது வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை மணி ஒலித்தததையடுத்து  அங்கிருந்து தெப்பக்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ரோந்தில் இருந்த இரவு ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நபர் தப்பிக்க முயற்சி மேற்கொண்டி ருந்தபோது போலீசார் அவரை மடக்கிப்பிடித்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.போலீசார் விரைந்து செயல்பட்டதால் ஏடிஎம் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது.

Tags:    

Similar News