ஆடி வெள்ளி: துர்க்கை, வராஹியம்மனுக்கு சிறப்பு பூஜை
மதுரை மேலமடை, தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கியவிநாயகர் ஆலயத்தில் ஆடிவெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது;
மதுரை மேலமடை, தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி, வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு பக்தரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.இதை அடுத்து, வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் மகளிர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதேபோல, மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும், ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.