மதுரையில் 11 ம் வகுப்புக்கு சேர்க்கை துவங்கியது

மதுரையில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ப்ளஸ் 1 மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியது.

Update: 2021-06-14 11:30 GMT

மதுரை,பொன்முடியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 சேர்க்கை தொடங்கியுள்ளதால் சமூக இடைவெளியுடன் நிற்கும் மாணவிகள்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்கு ஊராடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து அந்த மாவட்டங்களில் இன்றுமுதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இதனைதொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் வந்து சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெற்று, விண்ணப்பித்தும் வருகின்றனர்.

அந்தவகையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பிற்கான சேர்க்கைக்கு மாணவிகள் பெற்றோருடன்  ஆர்வமுடன் வந்து பள்ளியில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

Tags:    

Similar News