மதுரை ரயில் நிலையம் அருகேமின் கம்பத்தில் மோதிய அரசு பஸ் : பயணிகள் தப்பினர்

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர்தப்பினர்

Update: 2021-09-28 04:45 GMT

மதுரை ரயில் நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதிய  நகரப்பேருந்து.

மதுரை ரயில் நிலையம் அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து: மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதிருஷ்டவசமாக அதில் இருந்த பயணிகள் உயிர்தப்பினர்.

மதுரை பழங்காநத்தத்தில் இருந்து  எம்ஜிஆர் பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த மாநகர் அரசு பேருந்து, மதுரை ரயில் நிலையம் அருகே வந்த  போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தின் நடைபாதை மேடையில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்தில் இருந்த பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர்தப்பினர்பேருந்தில் இருந்த பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர்தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த மதுரை திடீர்நகர் போக்குவரத்து போலீசார் பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்து, பேருந்தை மீட்டு பணிமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, பேருந்து மோதியதில், அறுந்து கிடந்த  வயர்கள் மற்றும் அரசு கேபிள் வயர்கள் சீரமைக்கும் பணியில்  ஊழியர்கள்  ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News