பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக்கண்டித்து திமுக கூட்டணி தொழிற்சங்கங்கள் மறியல்

கேஸ் விலை உயர்வைக் கண்டித்தும் பொதுத்துறைகளை தனியாரிடம் ஒப்படைக்க வுள்ளதைக்கண்டித்து இந்த மறியல் போராட்டம் நடந்தது

Update: 2021-09-27 07:48 GMT

மத்திய அரசைக்கண்டித்து மதுரை ரயில்நிலையம் எதிரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொழில்சங்கத்தினர்.

மதுரை ரயில் முன்பு  மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட  திமுக கூட்டணி தொழில்சங்கத்தினர்  கைது  செய்யப்பட்டனர்.

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து, மதுரை ரயில் நிலையம் முன்பாக, திமுக கூட்டணிக் கட்சிகள் மறியலில் ஈடுபட்டனர்.மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரியும், கேஸ், விலை உயர்வைக் கட்டுப்படுத்துதல், பொதுத்துறைகளை, தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளதைக் கண்டித்தும், திமுக கூட்டணி கட்சி தொழிற் சங்கங் களான எல்.பி.எப்., ஐஎன்டியூசி, ஹெச்.எம்.எஸ். சிஜடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் தலைமையில் தொழிலாளர்கள், மதுரை ரயில் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டபோது, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்னதாக, மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News