சென்னை ஆலந்தூரில் 11-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை ஆலந்தூரில் 11-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Update: 2022-05-18 12:08 GMT

தற்கொலை செய்து கொண்ட மாணவரின் வீட்டில் குடும்பத்தினர் சோகமாக உள்ளனர்.

சென்னை ஆலந்தூர் மடுவின்கரையை சேர்ந்தவர் ஜெனார்த்தனன். இவர் அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மூத்த மகன் விஷ்வா(16), ஆலந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

வீட்டிற்கு வந்த விஷ்வா படுக்கையறைக்கு சென்று நெடுநேரம் கதவு திறக்கவில்லை. இதை பார்த்த இவருடைய  பாட்டி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்து பார்த்த போது விஷ்வா மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து வந்த பரங்கிமலை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விஷ்வா பள்ளி முடிந்து வரும் போது தன்னுடைய நண்பரிடம் நாளையிலிருந்து நான் பள்ளிக்கு வர மாட்டேன் என்று கூறியதாக  போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து பரங்கிமலை போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News