அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-04-19 13:24 GMT

பைல் படம்.

தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 1 முதல் 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Tags:    

Similar News