அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும்- சென்னை வானிலை மையம்

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-16 06:10 GMT

பைல் படம்.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Tags:    

Similar News