பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டுமா?: அமைச்சர் ஆவேசம்

பெட்ரோல் டீசலுக்கான மத்திய அரசு வரி அதிகமாக உள்ள நிலையில், மாநிலங்கள் வரிகளைக் குறைக்க சொல்வது நியாமில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்

Update: 2022-05-22 15:13 GMT

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 முதல் 2021 வரை மத்திய அரசால் கடுமையாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு இறுதியாக செவிசாய்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 2021 நவம்பரில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைப்பதற்கு முன்பே, தமிழக அரசு, 2021 ஆகஸ்டில் பெட்ரோல் மீதான வாட் வரியைக் குறைத்தது. இந்தக் குறைப்பினால் ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், தமிழக மக்களின் சுமையை குறைப்பதற்காக செய்யப்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகள் கணிசமாக உயர்ந்துள்ளன. மத்திய அரசின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தாலும், மாநிலங்களுக்கான வருவாயில் ஏற்ற அதிகரிப்பு இல்லை. மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது, அதே நேரத்தில் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அடிப்படை கலால் வரியைக் குறைக்கிறது.

மத்திய அரசின் அதிகப்படியான வரி அதிகரிப்பு அவர்களின் வரி குறைப்பு ஓரளவு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. 2014 விகிதங்களுடன் ஒப்பிடுகையில் வரிகள் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. எனவே, மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமே இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News