ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் : சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரசெயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்

Update: 2022-04-24 05:15 GMT

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 36 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள், ஊழியர்கள் என மொத்தம் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் அலுவலகங்கள் ,கல்வி நிறுவனங்களில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பின்பற்ற உறுதி செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

வடமாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்கள், அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .

மாவட்ட அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை விகிதத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவையான மருத்துவ கட்டமைப்புகளை தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News