தொடர்ந்து பெய்யும் கனமழை: 5 மாவட்டங்களில் 10 நிவாரண முகாம்கள்

5 மாவட்டங்களில் 314 நபர்கள் 10 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-11-08 19:24 GMT

தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழையால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 314 நபர்கள் 10 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு

1.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 43 குடும்பங்களைச் சார்ந்த 128 நபர்கள் 5 நிவாரண முகாம்களிலும்,

2. திருவண்ணாமலை மாவட்டத்தில், 15 குடும்பங்களைச் சார்ந்த 71 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,

3. செங்கல்பட்டு மாவட்டத்தில், 20 குடும்பங்களைச் சார்ந்த 79 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,

4. திருவள்ளூர் மாவட்டத்தில் 9 குடும்பங்களைச் சார்ந்த 36 நபர்கள் 1 நிவாரண முகாமிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சேத விபரம்:

கடந்த 24 மணி நேரத்தில், சென்னை , தேனி, மதுரை மாவட்டங்களில் 4 நபர்கள் உயிரிழந்துள்னர். மேலும், 16 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 237 குடிசைகள் பகுதியாகவும், 26 குடிசைகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 263 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 65 வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 70 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Tags:    

Similar News