திருக்குறள்- 96 அதிகாரம்: இனியவை கூறல்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.

Update: 2022-04-06 03:18 GMT

திருக்குறள்- 96

அதிகாரம்: இனியவைகூறல்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.

மு.வரதராசனார் உரை:

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

கலைஞர் உரை:

தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

Tags:    

Similar News