மாநிலங்களவை தேர்தல்: காங்கிரசுக்கு ஒரு இடம்

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மூவர் போட்டியிடுகின்றனர். காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது

Update: 2022-05-15 07:54 GMT

மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள்

தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியானதைத் தொடர்ந்து, ஜூன் 10ம் தேதி 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், திமுக சார்பில் மூவர் போட்டியிடுகின்றனர். ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில், தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News