கொரோனாவால் உயிரிழப்பு: ரூ.50,000/- நிதிஉதவி பெற எப்படி விண்ணப்பிக்க?

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள், தமிழக அரசின் ரூ.50,000/- நிதி உதவியை பெற விண்ணப்பிக்கும் முறை

Update: 2021-12-08 06:54 GMT

தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000/ (ரூபாய் ஐம்பதாயிரம்) நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகையினை எளிதாக பெறும் வண்ணம் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

1. https://www.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள் 

 இந்த படத்தில் உள்ளது போல தோன்றும் திரையில் WhatsNewகட்டத்தில்  உள்ள  ExGratiaCovidஎன்பதை கிளிக் செய்யுங்கள் .அதில் வெளிப்படும் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து சப்மிட் கொடுங்கள். 

Tags:    

Similar News