கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம்!

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

Update: 2021-06-14 13:30 GMT

கோவை ஆட்சியர் ஜி.எஸ். சமீரன்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 

புதிய ஆட்சித்தலைவர்களின் பெயர் விவரம் வருமாறு:

1. கோவை - ஜி.எஸ். சமீரன்

2. திருப்பூர் - வினீத்

3. நாமக்கல் -- ஸ்ரேயா சிங்

4. ஈரோடு - கிருஷ்ணன் உன்னி

நாமக்கல் மாவட்ட புதிய கலெக்டர் ஸ்ரேயா சிங், இதுவரை விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News