100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் நிலுவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நூறு நாள் வேலை திட்டத்தில், ஊதிய நிலுவையை உடனடியாக விடுவிக்கக்கோரி, பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-11-01 11:45 GMT

முதல்வர் ஸ்டாலின் - கோப்பு படம் 

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு நிதியாண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் நூறு நாட்கள் உடலுழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமும் ஒன்று.

2021-2022 ஆம் நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ரூ.3524.69 கோடியில் மொத்தத் தொகையும் 15.09.2021 வரை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைத்து, முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஏதும் விடுவிக்காத காரணத்தால், 1-11-2021 அன்றுள்ளவாறு 1178.12 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல், நிலுவையாக உள்ளது.

இதனால், பல ஆயிரக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பண்டிகைக் காலத்தினைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்க ஏதுவாக, உடனடியாக நிதியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரியுள்ளார்.

Tags:    

Similar News