பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

Update: 2022-01-04 06:55 GMT

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிடும் அடையாளமாக 10 குடும்பங்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் வழங்கி தொடங்கி வைத்தார். 



Tags:    

Similar News