குரங்கிற்கு முதலுதவி செய்த பிரபுவை அழைத்துப் பாராட்டினார் முதல்வர்

சாலையோரம் அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்த பிரபுவை அழைத்துப் பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Update: 2021-12-17 15:54 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் சமத்துவபுரத்தில், சாலையோரம் அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்தார் மு.பிரபு. இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகியது. அனைவரும் இந்த காட்சியை கண்டு நெகிழ்ந்தனர், பாராட்டினர்.

பிரபுவின் இந்த செயலை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.12.2021) தலைமைச் செயலகத்தில் அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

Tags:    

Similar News