மக்களே உஷார்..!: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 29, 30-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில், 11 மாவட்டங்களில் வரும் 29, 30 ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Update: 2022-06-27 12:20 GMT

சென்னை மண்டல ஆய்வு மையம்.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி, காற்று வேக மாறுபாடு, வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் நாளை முதல் 4 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், நாளை மறுநாள் 29 மற்றும் 30 ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த மாதம் (ஜூலை) 1-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News