மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

இரண்டாம் தாள் தேர்வை 12,76,071 பேர் எழுதியதில் 3,76,025 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-03 17:15 GMT

பைல் படம்.

மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ctet.nic.in என்கிற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை அறியலாம்.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல், கடந்த பிப்ரவரி மாதம் வரை ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. முதல் தாள் தேர்வில் 5,79,844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார். இரண்டாம் தாள் தேர்வை 12,76,071 பேர் எழுதியதில் 3,76,025 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் ctet.nic.in என்கிற இணையதள முகவரியில் வெளியாகிறது.

Tags:    

Similar News