கோயில் சொத்தை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல்

கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் சேகர்பாபு இன்று தாக்கல் செய்தார்

Update: 2021-09-13 06:54 GMT

அமைச்சர் சேகர் பாபு

கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்கள் மீது  குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைது செய்வதற்கான  சட்டத்திருத்த  மசோதாவை சட்டப்பேரவையில் இன்று  அமைச்சர் சேகர் பாபு தாக்கல் செய்தார் .

கோயில் சொத்துக்களை மீட்க மட்டுமே வழிவகை இருந்த நிலையில், கைது நடவடிக்கை எடுக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா தாக்கலானது.

Tags:    

Similar News