மாயமான 2 கொரோனா நோயாளிகள்

Update: 2021-03-16 10:30 GMT

கோயம்பேடு மார்க்கெட்டில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், போலியான முகவரி கொடுத்துவிட்டு மாயமான அவர்களை கண்டுபிடிக்குமாறு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது கோயம்பேடு மார்க்கெட். எனவே, தற்போது மார்க்கெட் வருபவர்களிடம் இருந்து முகவரி மற்றும் தொலைபேசி எண் பெறப்பட்டே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 இந்நிலையில்  கொரோனா பாதித்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

Tags:    

Similar News