தமிழகத்தில் கொரோனா - இன்றைய நிலவரம்.

தமிழக சுகாதாரத்துறை அறிக்கை...

Update: 2021-05-18 15:15 GMT

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,059 பேருக்கு கொரோனா 364பேர் உயிரிழப்பு: 21,362 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 16,64,350 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் மேலும் 33,059 பேருக்கு (நேற்று 33,075) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 16,64,350 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவில் இருந்து மேலும் 21,362 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 14,03,052 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் இன்று 364 பேர் (நேற்று 335) உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 18,369 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 6016 பேர் (நேற்று 6150) கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும்1,53,342 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது..தமிழகத்தில் 16,64,350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News