வாகன வரி செலுத்த - கால அவகாசம் நீட்டிப்பு...

15 லட்சம் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்கள் பயனடைவார்கள்

Update: 2021-05-17 16:32 GMT

போக்குவரத்து வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கூடுதல் தலைமைச் செயலர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் போக்குவரத்து வாகன உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் நலன்களை கருத்தில் கொண்டு அரசாணை எண் 552

ன்படி தமிழக அரசால் போக்குவரத்து வாகனங்களுக்கான 30-6-2021 காலாண்டு வரியினை அபராதம் இல்லாமல் செலுத்தும் கடைசி தேதியான 15-5-2021 என்பதை 30-6-2021 ஆக நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த உத்தரவினால் தமிழகத்தில் சுமார் 15 லட்சம் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்கள் பயனடைவார்கள் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News