மதுரை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் கோயம்புத்தூர் சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து...

தென்னக ரயில்வே மதுரை கோட்ட செய்திக்குறிப்பு

Update: 2021-05-12 13:14 GMT

நாகர்கோவிலில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்படும் வண்டி 06321 நாகர்கோவில் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து காலை 08.00 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06322 கோயம்புத்தூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை மே 14 முதல் மே 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் கோயம்புத்தூர் - மயிலாடுதுறை சிறப்பு ரயில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மங்களூரு சிறப்பு ரயில், கோயம்புத்தூர் - மங்களூர் சிறப்பு ரயில் ஆகியவையும் மே 14 முதல் மே 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது தென்னக ரயில்வே மதுரை கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News